ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “புதிய தீர்மானங்கள் மற்றும் இலக்குகளுடன் முன்னோக்கி பயணிப்பதற்கான தருணமே புத்தாண்டின் தொடக்கமாகும்.
இந்த 2024-ம் ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு நாம் தொடர்ந்து பங்களிப்போம். வளமான சமூகம் மற்றும் தேசத்தை கட்டமைக்கும் உறுதிமொழியுடன் புத்தாண்டை வரவேற்போம்.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த தருணத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Warm New Year greetings to all! May the Year 2024 bring happiness, peace and prosperity for everyone. Let us welcome the New Year with a renewed commitment to contribute to inclusive and sustainable development.
— President of India (@rashtrapatibhvn) January 1, 2024
அதேபோல, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இந்தியர்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்தியாவின் முழுமையான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் உறுதியான அர்ப்பணிப்புடன் புத்தாண்டின் விடியலை வரவேற்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Greetings to every Indian for the New Year 2024!
May the New Year bring in peace, prosperity and happiness to each and everyone.
Let us embrace the dawn of the #NewYear with a resolute commitment to contribute towards wholesome progress and prosperity of Bharat.
— Vice President of India (@VPIndia) January 1, 2024