2024 - தோனிக்கு முக்கியமான ஆண்டு - ஏன் தெரியுமா ?
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 – தோனிக்கு முக்கியமான ஆண்டு – ஏன் தெரியுமா ?

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 1, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024ஆம் ஆண்டு தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது, இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் ஆண்டாக 2024 இருக்கும் என கருதப்படுகிறது.

தோனி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாட ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.

இதற்காக தோனி காயத்திலிருந்து குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனி இத்துடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும்.

சிஎஸ்கே அணியில் தற்போது பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பை வழங்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி எப்படி இருக்க போகிறது என்பதற்கான விதையை தோனி 2024 ஆம் ஆண்டு விதைக்க வேண்டும். இதற்கு அவர் பல தியாகங்களை செய்தாக வேண்டும்.

தோனி இந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக கூட விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எதிர்காலத்துக்கு தேவையான சிஎஸ்கே அணியை கட்டமைப்பது, சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனை தேர்வு செய்வது, கடந்த சீசனில் பேட்டிங்கில் விளையாடாமல் இருந்த தோனி புதிய சீசனில் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான திட்டத்தை தீட்டுவது என்று பல சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது.

இதில் முக்கிய சவாலே தமக்கு பிடித்த ரசிகர்களை விட்டு எப்படி குட் பாய் சொல்வது என்பதே தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

Tags: ms dhoni cricket
ShareTweetSendShare
Previous Post

நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!

Next Post

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies