ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!
Jul 24, 2025, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் இதுவரை இல்லாத வகையில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்தது. இதனால், உள்ளூர் மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டனர். காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் வெளியில் செல்வது மிகவும் அரிதிலும் அரிதாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, மாநிலத்தில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் வேரறுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இதைத் தொடர்ந்து, அம்மாநில மக்கள் தைரியமாக வெளியில் சென்று வருகின்றனர். அதோடு, அம்மாநிலத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் தைரியமாகச் சென்று வருகின்றனர். புகழ்பெற்ற தால் ஏரி இங்குதான் இருக்கிறது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பண்டிகைகளும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்து சூழலில், 2024 புத்தாண்டு தினம் நேற்று இரவு முதல் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் எப்போதும் இல்லாத அளவிக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநில சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, இசை நிகழ்ச்சியோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், வான வேடிக்கை என லால்சௌக் பகுதியே அமளிதுமளிப்பட்டது.  இதைக் கண்டு வியந்துபோன உள்ளூர்வாசிகள் இதுவரை இதுபோன்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று வாய்பிளக்கிறார்கள்.

ஸ்ரீநகரின் காந்தாகர் மணிக்கூண்டு பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகமது யாசீன் என்பவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால்சௌக் பகுதியில் இதுபோன்று பார்த்ததே கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். மாநில மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். புத்தாண்டை முன்னிட்டு, லால்சௌக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, மாநில மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags: jammu kashmirSrinagarNew Year celebrationLalchowk
ShareTweetSendShare
Previous Post

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

Next Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies