ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் இதுவரை இல்லாத வகையில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்தது. இதனால், உள்ளூர் மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டனர். காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் வெளியில் செல்வது மிகவும் அரிதிலும் அரிதாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, மாநிலத்தில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் வேரறுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இதைத் தொடர்ந்து, அம்மாநில மக்கள் தைரியமாக வெளியில் சென்று வருகின்றனர். அதோடு, அம்மாநிலத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் தைரியமாகச் சென்று வருகின்றனர். புகழ்பெற்ற தால் ஏரி இங்குதான் இருக்கிறது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பண்டிகைகளும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்து சூழலில், 2024 புத்தாண்டு தினம் நேற்று இரவு முதல் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் எப்போதும் இல்லாத அளவிக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநில சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, இசை நிகழ்ச்சியோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், வான வேடிக்கை என லால்சௌக் பகுதியே அமளிதுமளிப்பட்டது.  இதைக் கண்டு வியந்துபோன உள்ளூர்வாசிகள் இதுவரை இதுபோன்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று வாய்பிளக்கிறார்கள்.

ஸ்ரீநகரின் காந்தாகர் மணிக்கூண்டு பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகமது யாசீன் என்பவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால்சௌக் பகுதியில் இதுபோன்று பார்த்ததே கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். மாநில மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். புத்தாண்டை முன்னிட்டு, லால்சௌக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, மாநில மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags: jammu kashmirSrinagarNew Year celebrationLalchowk
ShareTweetSendShare
Previous Post

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

Next Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies