ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!
Jul 29, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் இதுவரை இல்லாத வகையில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்தது. இதனால், உள்ளூர் மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டனர். காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் வெளியில் செல்வது மிகவும் அரிதிலும் அரிதாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, மாநிலத்தில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் வேரறுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இதைத் தொடர்ந்து, அம்மாநில மக்கள் தைரியமாக வெளியில் சென்று வருகின்றனர். அதோடு, அம்மாநிலத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் தைரியமாகச் சென்று வருகின்றனர். புகழ்பெற்ற தால் ஏரி இங்குதான் இருக்கிறது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பண்டிகைகளும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்து சூழலில், 2024 புத்தாண்டு தினம் நேற்று இரவு முதல் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் எப்போதும் இல்லாத அளவிக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநில சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, இசை நிகழ்ச்சியோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், வான வேடிக்கை என லால்சௌக் பகுதியே அமளிதுமளிப்பட்டது.  இதைக் கண்டு வியந்துபோன உள்ளூர்வாசிகள் இதுவரை இதுபோன்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று வாய்பிளக்கிறார்கள்.

ஸ்ரீநகரின் காந்தாகர் மணிக்கூண்டு பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகமது யாசீன் என்பவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால்சௌக் பகுதியில் இதுபோன்று பார்த்ததே கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். மாநில மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். புத்தாண்டை முன்னிட்டு, லால்சௌக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, மாநில மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags: jammu kashmirSrinagarNew Year celebrationLalchowk
ShareTweetSendShare
Previous Post

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

Next Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies