நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை (எம்.டி.ஹெச்.எல்.) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்பையில் தூய்மைப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இது மகாராஷ்டிரா முழுவதும் நடத்தப்படும். சிலர் ‘ஸ்வச் பாரத் அபியான்’ என்று போட்டோ செஷன் செய்தார்கள். ஆனால், இப்போதுதான் அனைவருக்கும் தூய்மையின் அர்த்தம் புரிகிறது.
மும்பையின் செவ்ரி மற்றும் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நவாஷேவா பகுதி இடையே இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 21.8 கி.மீ தூரம். முந்தைய பயண நேரம் 2 மணி நேரமாகும். தற்போது 15-20 நிமிடங்களாக குறையும்.
இந்தப் பாலத்தை வரும் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பாலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டுவரும்” என்றார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தின் 2 பெரிய நகரங்களை இணைக்கும் தமனி மும்பை புனே எக்ஸ்பிரஸ்வேயுடன் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைக்கப்படும். மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு என்பது 6 வழி கடல் இணைப்பாகும். இது கடலில் 16.50 கிலோ மீட்டர் நீளமும், நிலத்தில் 5.50 கி.மீ. நீளமும் கொண்டது.