2023 - பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 – பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையை சேகரிக்கிறது. 2023-ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் 789 தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்து 463 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

மொத்த இறப்பு எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டை விட அதிகமாகவும், 2017-ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாகவும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் முக்கிய மையங்களாக இருப்பதாக சிஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-இல் ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை 980 இலிருந்து, 2023-இல் ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் 57 சதவீதமும், கைபர் பக்துன்க்வாவில் 55 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வன்முறை தொடர்பான இறப்புகளில் 65 சதவீதம் தீவிரவாதத்தால் நிகழ்ந்ததாகவும், மீதமுள்ள 35 சதவீதம் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கைகளின் போது நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு வருடத்தில் குறைந்தது 586 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 17 சதவீதம் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் லிபரேஷன் ஆர்மி, டெய்ஷ் (இஸ்லாமிக்) போன்றவற்றால் நடந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட  நடவடிக்கையில் 545 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Tags: pakistanterrorismTerrorism deathsdeaths
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!

Next Post

வெற்றியை கொடுக்கட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies