2023 - பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!
Sep 1, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 – பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையை சேகரிக்கிறது. 2023-ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் 789 தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்து 463 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

மொத்த இறப்பு எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டை விட அதிகமாகவும், 2017-ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாகவும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் முக்கிய மையங்களாக இருப்பதாக சிஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-இல் ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை 980 இலிருந்து, 2023-இல் ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் 57 சதவீதமும், கைபர் பக்துன்க்வாவில் 55 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வன்முறை தொடர்பான இறப்புகளில் 65 சதவீதம் தீவிரவாதத்தால் நிகழ்ந்ததாகவும், மீதமுள்ள 35 சதவீதம் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கைகளின் போது நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு வருடத்தில் குறைந்தது 586 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 17 சதவீதம் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் லிபரேஷன் ஆர்மி, டெய்ஷ் (இஸ்லாமிக்) போன்றவற்றால் நடந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட  நடவடிக்கையில் 545 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Tags: pakistanterrorismTerrorism deathsdeaths
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!

Next Post

வெற்றியை கொடுக்கட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies