முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!
Aug 17, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் “ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் “ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பரியம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினரும், முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) தலைமை புரவலருமான இந்திரேஷ் குமார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இந்திரேஷ் குமார், “இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் 99 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள் மற்றும் பொதுவான அடையாளம் உள்ளது.  நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

எங்களுக்கும் வெளிநாட்டினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே, ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, தர்காக்கள், மக்தாப்கள், மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்களில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்று 11 முறை முழங்குங்கள். மீதி நேரங்களில் நீங்கள் உங்கள் வழிபாட்டைப் பின்பற்றுங்கள்.

அதேபோல, குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மதத் தலங்களை ஜனவரி 22-ம் தேதியன்று இரவு 11-2 மணிக்குள் தங்கள் இபாதத் கா மற்றும் பிரார்த்தனைக் கூடங்களை பிரமாதமாக அலங்கரித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இந்துக்கள் அல்லாத அனைவரும் மாலையில் “சிராக்” (தியாஸ்) விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

அதோடு, இராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். நாங்கள் எப்போது அவர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் என்று சொன்னோம். அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படிக் கருதுகிறார்கள்.

அப்துல்லா முடிந்தால் அவர்கள் அனைவருக்கும் புரிய வைக்கட்டும். மேலும், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை அவர் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல வேண்டும். கும்பாபிஷேக விழாவில் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம். அதில் கலந்து கொள்ள அழைப்பிதழ் எல்லாம் கட்டாயம் இல்லை. எனவே, அதைக் காரணமாகச் சொல்ல வேண்டாம்” என்றார்.

Tags: Ram TempleRSS leaderurges Muslimschant 'Jai Shri Ram'inauguration
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் புதிதாக 296 பேருக்கு கொரோனா பாதிப்பு – ஒருவர் பலி!

Next Post

ப்ரோ கபடி : புனேரி பல்டன் அணி இமாலய வெற்றி!

Related News

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies