முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் “ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் “ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பரியம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினரும், முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) தலைமை புரவலருமான இந்திரேஷ் குமார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இந்திரேஷ் குமார், “இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் 99 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள் மற்றும் பொதுவான அடையாளம் உள்ளது.  நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

எங்களுக்கும் வெளிநாட்டினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே, ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, தர்காக்கள், மக்தாப்கள், மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்களில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்று 11 முறை முழங்குங்கள். மீதி நேரங்களில் நீங்கள் உங்கள் வழிபாட்டைப் பின்பற்றுங்கள்.

அதேபோல, குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மதத் தலங்களை ஜனவரி 22-ம் தேதியன்று இரவு 11-2 மணிக்குள் தங்கள் இபாதத் கா மற்றும் பிரார்த்தனைக் கூடங்களை பிரமாதமாக அலங்கரித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இந்துக்கள் அல்லாத அனைவரும் மாலையில் “சிராக்” (தியாஸ்) விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

அதோடு, இராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். நாங்கள் எப்போது அவர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் என்று சொன்னோம். அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படிக் கருதுகிறார்கள்.

அப்துல்லா முடிந்தால் அவர்கள் அனைவருக்கும் புரிய வைக்கட்டும். மேலும், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை அவர் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல வேண்டும். கும்பாபிஷேக விழாவில் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம். அதில் கலந்து கொள்ள அழைப்பிதழ் எல்லாம் கட்டாயம் இல்லை. எனவே, அதைக் காரணமாகச் சொல்ல வேண்டாம்” என்றார்.

Tags: Ram TempleRSS leaderurges Muslimschant 'Jai Shri Ram'inauguration
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் புதிதாக 296 பேருக்கு கொரோனா பாதிப்பு – ஒருவர் பலி!

Next Post

ப்ரோ கபடி : புனேரி பல்டன் அணி இமாலய வெற்றி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies