முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 11:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் “ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் “ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பரியம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினரும், முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) தலைமை புரவலருமான இந்திரேஷ் குமார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இந்திரேஷ் குமார், “இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் 99 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள் மற்றும் பொதுவான அடையாளம் உள்ளது.  நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

எங்களுக்கும் வெளிநாட்டினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே, ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, தர்காக்கள், மக்தாப்கள், மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்களில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்று 11 முறை முழங்குங்கள். மீதி நேரங்களில் நீங்கள் உங்கள் வழிபாட்டைப் பின்பற்றுங்கள்.

அதேபோல, குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மதத் தலங்களை ஜனவரி 22-ம் தேதியன்று இரவு 11-2 மணிக்குள் தங்கள் இபாதத் கா மற்றும் பிரார்த்தனைக் கூடங்களை பிரமாதமாக அலங்கரித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இந்துக்கள் அல்லாத அனைவரும் மாலையில் “சிராக்” (தியாஸ்) விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

அதோடு, இராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். நாங்கள் எப்போது அவர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் என்று சொன்னோம். அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படிக் கருதுகிறார்கள்.

அப்துல்லா முடிந்தால் அவர்கள் அனைவருக்கும் புரிய வைக்கட்டும். மேலும், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை அவர் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல வேண்டும். கும்பாபிஷேக விழாவில் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம். அதில் கலந்து கொள்ள அழைப்பிதழ் எல்லாம் கட்டாயம் இல்லை. எனவே, அதைக் காரணமாகச் சொல்ல வேண்டாம்” என்றார்.

Tags: Ram TempleRSS leaderurges Muslimschant 'Jai Shri Ram'inauguration
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவில் புதிதாக 296 பேருக்கு கொரோனா பாதிப்பு – ஒருவர் பலி!

Next Post

ப்ரோ கபடி : புனேரி பல்டன் அணி இமாலய வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies