இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் நீண்ட காலமாகவே எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வைத்து இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.
தீவிரவாதத்தை தனது முக்கியக் கொள்கையாக பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் இத்தகைய விளையாட்டை நாம் விளையாடாமல் அதனை பொருத்தமற்றதாக்கி விட்டோம்.
அண்டை நாடுகளை நாம் மாற்ற முடியாது. ஆனால், அவர்கள் முன்வைக்கும் தீவிரவாத அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நம்மை மிரட்டுவதற்காக தீவிரவாதத்தை சட்டப்பூர்வமானது மற்றும் பயனுள்ளது என்று அவர்கள் நிர்ணயித்த விதிமுறைகளின் கீழ் பாகிஸ்தானை நாங்கள் கையாள மாட்டோம்” என்றார்.