இந்தியாவில் ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் விதமாக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் பயனர்களுக்காக மத்திய அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் விதமாக புதிய செயலி வடிவமைக்கப்படுகிறது. இந்த சூப்பர் செயலியை, ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான CRIS உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பை உருவாக்குவதற்கான செலவு சுமார் 90 கோடி ரூபாய் ஆகும்.
இந்த சூப்பர் ஆப்பில், Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு பயன்பாடுகள் இருக்கும். மேலும், PortRead, Satark, TMS-Nirikshan, IRCTC Rail Connect, IRCTC eCatering Food on Track மற்றும் IRCTC Air போன்றவற்றையும் சூப்பர் ஆப்ஸில் சேர்க்கலாம்.
இந்த சூப்பர் ஆப், பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். பயனர்கள், ஒரு ஆப்பில் இருந்து அனைத்து ரயில்வே சேவைகளையும் பெற முடியும். இதனால், பயனர்களுக்கு பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும், பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த சூப்பர் செயலி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் :
டிக்கெட் முன்பதிவு
ரயில் கண்காணிப்பு
புகார்பதிவு
உணவு ஆர்டர் செய்தல்
ரயில் பயணத்திற்கான தகவல்கள்
ரயில்வே சேவைகள் தொடர்பான அம்சங்கள்
சூப்பர் செயலியின் நன்மைகள் :
ரயில் பயணிகளுக்கு எளிமையான பயணம்
பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தல்
இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாக கொண்டே ரயில்வே துறை இந்த புதிய செயலியை வடிவமைத்திருக்கிறது.