வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்றும், சிலர் அழைப்பிதழ் வந்ததாகவும், ஆனால், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என்றும் கூறிவருக்கின்றனர்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க. இராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், தனது கட்சியின் தொண்டர்கள் யாரும் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜ.க. நடத்தும் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜ.க.வின் நிகழ்ச்சி. பா.ஜ.க.வின் பேரணி. பா.ஜ.க. நிகழ்ச்சி முடிந்த பிறகு நாங்கள் அயோத்தி செல்வோம் என்று கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இதற்காக இராமர் பக்தர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

எனினும், எல்லோரும் 22-ம் தேதி அயோத்திச் சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும்.

இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று கூறிவருகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களை ஹனுமன் அழைத்து வருவார்” என்று கூறினார்.

Tags: dharmendra pradhanRam TempleAyodya
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

Next Post

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies