4 பேர் சுட்டுக் கொலை... பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
Oct 10, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 பேர் சுட்டுக் கொலை… பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் புத்தாண்டு தினத்தன்று 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்திருக்கிறது.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, இரு வேறு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், 180 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பி வந்தது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில், கமாண்டோ ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து, நேற்று ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று மணிப்பூருக்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, மியான்மர் எல்லை அருகே இருக்கும் மோரே நகருக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அவர்களது வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பைரேன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க காவலர்களை குவித்துள்ளோம்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Manippurviolence4 killed
ShareTweetSendShare
Previous Post

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடக்கம்!

Next Post

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல்!

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies