4 பேர் சுட்டுக் கொலை... பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
Aug 24, 2025, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 பேர் சுட்டுக் கொலை… பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் புத்தாண்டு தினத்தன்று 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்திருக்கிறது.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, இரு வேறு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், 180 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பி வந்தது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில், கமாண்டோ ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து, நேற்று ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று மணிப்பூருக்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, மியான்மர் எல்லை அருகே இருக்கும் மோரே நகருக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அவர்களது வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பைரேன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க காவலர்களை குவித்துள்ளோம்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Manippurviolence4 killed
ShareTweetSendShare
Previous Post

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடக்கம்!

Next Post

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல்!

Related News

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies