4 பேர் சுட்டுக் கொலை... பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
Apr 4, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 பேர் சுட்டுக் கொலை… பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் புத்தாண்டு தினத்தன்று 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்திருக்கிறது.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, இரு வேறு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், 180 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பி வந்தது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில், கமாண்டோ ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து, நேற்று ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று மணிப்பூருக்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, மியான்மர் எல்லை அருகே இருக்கும் மோரே நகருக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அவர்களது வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பைரேன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க காவலர்களை குவித்துள்ளோம்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Manippurviolence4 killed
ShareTweetSendShare
Previous Post

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடக்கம்!

Next Post

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல்!

Related News

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies