மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி இனத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் இயற்றப்பட்டது.

ஆனால், மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குடியுரிமை வழங்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது.

அதேசமயம், இச்சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாகக் கூறி வருகிறார். இந்த சூழலில்தான், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், விதிகள் அறிவிக்கப்பட்டால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.

அதோடு, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அச்சட்டம் தொடா்பான விதிகளை வகுத்து, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் துணைச் சட்டக் குழுக்களிடம் கால அவகாசம் கோர வேண்டும். இப்படித்தான், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரி வருகிறது.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருதுகிறாராம். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. தொடர்பான விதிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சி.ஏ.ஏ. சட்டப்படி மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Amit Shahcaahome ministry
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

Next Post

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies