மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி இனத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் இயற்றப்பட்டது.

ஆனால், மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குடியுரிமை வழங்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது.

அதேசமயம், இச்சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாகக் கூறி வருகிறார். இந்த சூழலில்தான், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், விதிகள் அறிவிக்கப்பட்டால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.

அதோடு, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அச்சட்டம் தொடா்பான விதிகளை வகுத்து, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் துணைச் சட்டக் குழுக்களிடம் கால அவகாசம் கோர வேண்டும். இப்படித்தான், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரி வருகிறது.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருதுகிறாராம். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. தொடர்பான விதிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சி.ஏ.ஏ. சட்டப்படி மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: caahome ministryAmit Shah
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

Next Post

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies