மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி இனத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் இயற்றப்பட்டது.

ஆனால், மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குடியுரிமை வழங்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது.

அதேசமயம், இச்சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாகக் கூறி வருகிறார். இந்த சூழலில்தான், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், விதிகள் அறிவிக்கப்பட்டால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.

அதோடு, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அச்சட்டம் தொடா்பான விதிகளை வகுத்து, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் துணைச் சட்டக் குழுக்களிடம் கால அவகாசம் கோர வேண்டும். இப்படித்தான், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரி வருகிறது.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருதுகிறாராம். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. தொடர்பான விதிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சி.ஏ.ஏ. சட்டப்படி மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Amit Shahcaahome ministry
Share
Tweet
SendShare
Previous Post

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

Next Post

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies