நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் - சிராஜ்!
Jan 14, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் – சிராஜ்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெறும் சரிவைச் சந்தித்துள்ளது.

சரிவைச் சரி செய்ய இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய இந்தியா 153/4 என இருந்த நேரத்தில் 153 ஆல் அவுட் ஆனது.

அதனால் ஒருவேளை இதே பிட்ச் இந்தியாவில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்திருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 55க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், ” முதல் நாள் காலையில் பார்த்த போது 55-க்கு ஆல் அவுட்டாகக் கூடிய பிட்ச்சாக அது தெரியவில்லை. காலையில் நல்ல வெயில் அடித்ததால் நமக்கு பிட்ச் கை கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்துக் களமிறங்கவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் பவுலிங் பார்ட்னர்ஷிப்பை பொறுத்தது. குறிப்பாக எதிர்புறத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ” அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். இது போல பவுலிங்க்கு கை கொடுக்கும் மைதானங்களில் நாம் அவுட் ஸ்விங்கர் பந்துகளை வீசலாம் என்பது போன்ற நிறையத் திட்டங்களை பவுலர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஒரு லைனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் பலவற்றைப் பின்பற்றினால் குழப்பமடைந்து விடுவீர்கள்” என்று கூறினார்.

Tags: india vs southafricaMohammed Siraj Indian cricketer
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Next Post

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies