எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெறும் சரிவைச் சந்தித்துள்ளது.
சரிவைச் சரி செய்ய இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய இந்தியா 153/4 என இருந்த நேரத்தில் 153 ஆல் அவுட் ஆனது.
அதனால் ஒருவேளை இதே பிட்ச் இந்தியாவில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்திருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 55க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், ” முதல் நாள் காலையில் பார்த்த போது 55-க்கு ஆல் அவுட்டாகக் கூடிய பிட்ச்சாக அது தெரியவில்லை. காலையில் நல்ல வெயில் அடித்ததால் நமக்கு பிட்ச் கை கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்துக் களமிறங்கவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் பவுலிங் பார்ட்னர்ஷிப்பை பொறுத்தது. குறிப்பாக எதிர்புறத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ” அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். இது போல பவுலிங்க்கு கை கொடுக்கும் மைதானங்களில் நாம் அவுட் ஸ்விங்கர் பந்துகளை வீசலாம் என்பது போன்ற நிறையத் திட்டங்களை பவுலர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஒரு லைனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் பலவற்றைப் பின்பற்றினால் குழப்பமடைந்து விடுவீர்கள்” என்று கூறினார்.