நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் - சிராஜ்!
Aug 5, 2026, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் – சிராஜ்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெறும் சரிவைச் சந்தித்துள்ளது.

சரிவைச் சரி செய்ய இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய இந்தியா 153/4 என இருந்த நேரத்தில் 153 ஆல் அவுட் ஆனது.

அதனால் ஒருவேளை இதே பிட்ச் இந்தியாவில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்திருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 55க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு கேப் டவுன் பிட்ச் மோசமாக இல்லை என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்புறத்தில் பும்ரா துல்லியமாகப் பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தால் தமக்கு 6 விக்கெட்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், ” முதல் நாள் காலையில் பார்த்த போது 55-க்கு ஆல் அவுட்டாகக் கூடிய பிட்ச்சாக அது தெரியவில்லை. காலையில் நல்ல வெயில் அடித்ததால் நமக்கு பிட்ச் கை கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்துக் களமிறங்கவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் பவுலிங் பார்ட்னர்ஷிப்பை பொறுத்தது. குறிப்பாக எதிர்புறத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ” அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். இது போல பவுலிங்க்கு கை கொடுக்கும் மைதானங்களில் நாம் அவுட் ஸ்விங்கர் பந்துகளை வீசலாம் என்பது போன்ற நிறையத் திட்டங்களை பவுலர்கள் நினைப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஒரு லைனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் பலவற்றைப் பின்பற்றினால் குழப்பமடைந்து விடுவீர்கள்” என்று கூறினார்.

Tags: india vs southafricaMohammed Siraj Indian cricketer
Share
Tweet
SendShare
Previous Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Next Post

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies