மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி நகரை சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கான  பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விவிஐபி விருந்தினர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அயோத்தியை நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நகரமாக மாற்ற   மின்சார கார் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு இனிமையான பயணத்தை வழங்க 12 மின்சார கார்கள் பயன்படுத்தப்படவுள்ளன.  இந்த  12 எலக்ட்ரிக் கார்களும் அயோத்தி கான்ட் ரயில் நிலையம், தாம் சந்திப்பு,  மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் விவிஐபிகளை வரவேற்க நிறுத்தப்பட்டுள்ளன.

ராமர் கோவிலுக்கு  வரும் அனைவரும் இந்த  மின்சார கார்களை பயன்படுத்தலாம். தற்போது 12 கார்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஜனவரி 22ம் தேதிக்குள் கூடுதல் கார்கள் கொண்டு வரப்படும்.  ராம ஜென்மபூமி, சூரஜ் குண்ட், சூர்யு நதி, பாரத் குண்ட் போன்ற அனைத்து  வழிபாட்டு மையங்களுக்கும் இந்த மின்சார கார்கள் செல்ல உதவும். இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான கட்டணம் 10 கிமீ செல்ல 250 ரூபாய். 20 கிலோமீட்டருக்கு 400 ரூபாய் மற்றும் 12 மணி நேரத்திற்கு 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு, அயோத்தி வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மேலும் பல மின்சார கார் வசதி அதிகரிக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து  மின்சார கார்களும் மொபைல் செயலியுடன் இணைக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் மொபைல் செயலி மூலம் மின்சார கார்களை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.

அயோத்தி கான்ட் ஸ்டேஷனுக்கு வரும் மக்களுக்காக இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. மின்சார கார்களில் பயணிப்பவர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். அயோத்தி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள்,  அயோத்தியின் வளர்ச்சி மற்றும் மின்சார கார் பயணத்தை பாராட்டியுள்ளனர்.

Tags: electric cars boolingayodhyaELECTRIC CARSRam Mandir consecration ceremonyAyodhya Dham Junction
ShareTweetSendShare
Previous Post

தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!

Next Post

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies