தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா தற்போது புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக உள்ளது என்றும், தேச நலனை கருத்தில் கொண்டே தனது அரசு ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, தமிழகம், லட்சத்தீவில் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “தேச நலனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. நேஷன் ஃபர்ஸ்ட் என்ற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதால், எந்தவொரு கடினமான முடிவும் எனக்கு கடினமாகத் தெரியவில்லை.

மோடியின் உத்தரவாதம் என்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் அல்ல. ஏழைகளின் நம்பிக்கையே உத்தரவாதம். மோடி தனது கடமையிலிருந்து பின்வாங்க மாட்டார் என்பது இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் தெரியும்.

பின்தங்கியதாக உணர்ந்த ஒரு நாட்டிலிருந்து, இந்தியா இப்போது முன்னணியில் இருந்து முன்னேறி, புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக மாறி இருக்கிறது.இது இந்தியாவின் தருணம் என்பது இன்று உலக ஒருமித்த கருத்து தெளிவாக உள்ளது.

“ஜன் அந்தோலன்”கள் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் விளைவு சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய இலக்குகளை அடைய முடியும் என்பதை நான் நம்புகிறேன். 2014-ல் நான் பிரதமரானபோது, ​​இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவு 2 டிரில்லியன் டாலர்கள்.

அதேசமயம், 2023-24 இறுதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.75 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும். உள்கட்டமைப்புக்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது அனைவரும் அறிந்ததே.

உள்கட்டமைப்பு உருவாக்கம் இதுவரை கண்டிராத வேகத்தில் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அனைத்துத் துறைகளும் தற்போது சிறப்பாக செயல்படுகின்றன.

ஜம்மு காஷ்மீரில் நீடித்த அமைதியை உறுதி செய்யும் விவகாரத்தில், பாதுகாப்பு, மேம்பாடு, உள்கட்டமைப்பு, மனித மூலதனத்தில் முதலீடு மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசாங்க செயல்முறைகளை முழுமையாக மறுசீரமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பலமுனை அணுகுமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.

Tags: PM ModiPrees Meet
Share
Tweet
SendShare
Previous Post

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Next Post

மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies