கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக் பில்லர், வடபழனி, இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் திடீரென பெய்த மழையால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.