ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு, கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரை, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு கட்சியின், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இராமர் கோவிலின் திறப்பு விழாவிற்காக, அனைத்து மாநிலங்களிலும் தூய்மை இயக்கம் தவிர, ஜனவரி 22-ஆம் தேதி தீபங்கள் ஏற்றி தீபாவளியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்யுமாறு, மாநில பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.
துப்புரவு பணி, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கோவில் வளாகத்தில் தூய்மையை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களில் சிறப்பு தூய்மை இயக்கங்கள் நடத்துமாறு கூறியுள்ளார்.
கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதில் கோவில் பகுதிகளைச் சுத்தம் செய்தால், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், குப்பைத் தொட்டிகள் வைத்தல் அடங்கும்.
இந்த நிகழ்ச்சிகளில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.