நாடு முழுவதும் சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர்களுக்கு உத்தரவு!
Jul 29, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர்களுக்கு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு, கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரை, சிறப்பு தூய்மை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துமாறு கட்சியின், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் ஜே.பி. நட்டா கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இராமர் கோவிலின் திறப்பு விழாவிற்காக, அனைத்து மாநிலங்களிலும் தூய்மை இயக்கம் தவிர, ஜனவரி 22-ஆம் தேதி தீபங்கள் ஏற்றி தீபாவளியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்யுமாறு, மாநில பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

துப்புரவு பணி, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கோவில் வளாகத்தில் தூய்மையை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஜனவரி 22-ஆம் தேதி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களில் சிறப்பு தூய்மை இயக்கங்கள் நடத்துமாறு கூறியுள்ளார்.

கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதில் கோவில் பகுதிகளைச் சுத்தம் செய்தால், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், குப்பைத் தொட்டிகள் வைத்தல் அடங்கும்.

இந்த நிகழ்ச்சிகளில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!

Next Post

அயோத்தியில் சர்வதேச காத்தாடி திருவிழா !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies