ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது!
Jul 26, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளான இன்று 16 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் தமிழக அணி குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89வது பதிப்பு இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

எலைட் ‘ஏ’ பிரிவு :

நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா, 2 முறை சாம்பியன் விதர்பா, ஜார்கண்ட், மாராட்டியம், ராஜஸ்தான், அரியானா, சர்வீசஸ், மணிப்பூர் ஆகிய அணிகள் எலைட் ‘ஏ’ பிரிவுவில் இடம்பெற்றுள்ளனர்.

எலைட் ‘பி’ பிரிவு :

‘பி’ பிரிவில் 41 முறை சாம்பியனான மும்பை, பெங்கால், ஆந்திரா, கேரளா, சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், அசாம், பீகார் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

எலைட் ‘சி’ பிரிவு :

கர்நாடகா, பஞ்சாப், ரெயில்வே, தமிழ்நாடு, கோவா, குஜராத், திரிபுரா, சண்டிகார் ஆகிய அணிகள் எலைட் ‘சி’ பிரிவுவில் இடம்பெற்றுள்ளனர்.

எலைட் ‘டி’ பிரிவு :

‘டி’ பிரிவில் மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், பரோடா, டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும். ‘பிளேட்’ பிரிவில், கடந்த சீசனில் சொதப்பியதால் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் ‘எலைட்’ என்ற முன்னணி பிரிவுக்கு முன்னேறும்.

இதன் லீக் சுற்று பிப்ரவரி 19-ஆம் தேதி முடிவடைகிறது. கால்இறுதி போட்டிகள் பிப்.23 ஆம் தேதியும், அரைஇறுதி போட்டிகள் மார்ச் 2-ஆம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10ஆம் தேதியும் தொடங்குகிறது.

தொடக்க நாளான இன்று 16 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணி, சின்டன் கஜா தலைமையிலான குஜராத் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

Tags: Cricketcricket matchranjith trophy
ShareTweetSendShare
Previous Post

திமுகவை அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும்! – அண்ணாமலை

Next Post

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies