திமுகவை அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும்! - அண்ணாமலை
Aug 7, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவை அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஜாதி அரசியலைப் புகுத்தி, பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்யத் தொடங்கியது திமுகதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

சரபங்கா நதிக்கரையில் செழிப்பான ஊராக இது உள்ளது.  பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியில், 100 ரூபாயில் 50 ரூபாய் மாநில அரசுக்கு நேரடியாகவும், மேலும் 21 ரூபாய் நிதி ஆணையத்தின் மூலமாகவும் நேரடியாக மாநில அரசுக்கே கிடைக்கிறது. 100 ரூபாயில் 71 ரூபாய் மாநில அரசுக்கும், 29 ரூபாய் மத்திய அரசுக்கும் பகிரப்படுகிறது.

அந்த நிதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பத்தாண்டு கால நல்லாட்சியில், சேலம் மாவட்டத்தில் 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு ரூ. 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,20,539 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், இதுவரை ரூ. 30,000, முத்ரா கடனுதவி 6,682 கோடி ரூபாய் என வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏராளம். 100 ரூபாயில் 71 ரூபாய் பெறும் திமுக அரசு மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள் என்ன?

பாஜக குடும்ப அரசியலை எதிர்க்கிறது. தமிழகம் முழுவதுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஒரு குடும்பத்தில் இருப்பவர்களே மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் பழங்குடிகளிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுதான் சமூக நீதி. காலாகாலமாக, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை, தமிழகத்திலிருந்து அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும். தமிழகத்தில் ஜாதி அரசியலைப் புகுத்தி, பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்யத் தொடங்கியது திமுகதான்.

பிரதமரைப் பொறுத்தவரை, ஏழை ஜாதி, பெண்கள் ஜாதி, விவசாயிகள் ஜாதி, இளைஞர்கள் ஜாதி என நான்கு ஜாதிகள் மட்டும்தான். வேறு ஜாதி வேறுபாடு பிரதமருக்கு இல்லை.

கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 2.69 லட்ச கோடி ரூபாய் கூட்டியுள்ளது திமுக. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாயாக இருக்கும். தமிழகத்தில் உள்ள சுமார் 2.2 கோடி குடும்பங்களின் மீதும் 3.81 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது தமிழக அரசு. மேலும் தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளுக்கு வருமானம் வருவதற்காக, திமுக கட்சிக்காரர்கள் கமிஷன் பெற, என திமுகவினர் சம்பாதிப்பதற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது திமுக. இதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களுக்கு திமுக பொறுப்பேற்பதில்லை.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள்! 

Next Post

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies