போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!
Jul 25, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாடல் அழகி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரபல தாதா சந்தீப் கடோலி. இவரது காதலி மாடல் அழகி திவ்யா பஹுஜா. இந்த சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதா சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணையில், அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அந்த வகையில், மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திவ்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை. இதுகுறித்து திவ்யா குடும்பத்தினர் குருகிராம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திவ்யாவுக்கும், ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்ததை திவ்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர், அப்புகைப்படங்களைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இதில் ஏற்பட்ட மோதலில், அபிஜித் சிங் துப்பாக்கியால் திவ்யாவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸில் சிக்கினர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி சந்தீப்பின் சகோதரர் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், அபிஜித் சிங் கூலிப்படையாக செயல்பட்டு, திவ்யாவை சுட்டுக் கொன்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Shoot deadFake EncounterModel queen
ShareTweetSendShare
Previous Post

மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா! 

Next Post

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies