போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!
Oct 26, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாடல் அழகி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரபல தாதா சந்தீப் கடோலி. இவரது காதலி மாடல் அழகி திவ்யா பஹுஜா. இந்த சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதா சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணையில், அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அந்த வகையில், மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திவ்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை. இதுகுறித்து திவ்யா குடும்பத்தினர் குருகிராம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திவ்யாவுக்கும், ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்ததை திவ்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர், அப்புகைப்படங்களைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இதில் ஏற்பட்ட மோதலில், அபிஜித் சிங் துப்பாக்கியால் திவ்யாவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸில் சிக்கினர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி சந்தீப்பின் சகோதரர் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், அபிஜித் சிங் கூலிப்படையாக செயல்பட்டு, திவ்யாவை சுட்டுக் கொன்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Shoot deadFake EncounterModel queen
ShareTweetSendShare
Previous Post

மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா! 

Next Post

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies