இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்
Jul 28, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். பின்னர் நேபாள பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, நான் இன்று உங்கள் முன்  திருப்தியுடன், பெருமையுடன் நிற்கிறேன். புகழ்பெற்ற திரிபுவன் பல்கலைக்கழகத்தின் புதிதாகக் கட்டப்பட்ட மைய நூலகம், அத்துடன் 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைத் திட்டம் ஆகியவை  நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறேன். நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு  எங்கள் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 1,000 கோடி நிதித் தொகுப்பை நீட்டிக்க 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான எங்கள் முடிவை, நேபாள பிரதமர் பிரசண்டாவிடம் நேற்று தெரிவித்தேன்.

பல ஆண்டுகளாக,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன்,  இந்தியா-நேபாள உறவின் உண்மையான மாற்றத்தை நாங்கள் கண்டோம். இந்த  கூட்டாண்மை பல மடங்கு விரிவடைந்துள்ளது . மின் துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட  அமலாக்கம் ஆகிய துறைகளில் சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அண்டை நாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன், குறிப்பாக நேபாளத்துடனான  உறவைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகிய கொள்கைகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை எங்களுடன்  இணைந்து நமது வளர்ச்சிப் பயணத்தில் அழைத்துச் செல்வோம் என ஜெய்சங்கர் கூறினார்.

Tags: Nepal PM PrachandaneapalPM ModiIndiaJaishankarTribhuvan University Central Librarypost-earthquake reconstruction
ShareTweetSendShare
Previous Post

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Next Post

சென்னை மாரத்தான் ஓட்டம் – மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

Related News

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies