போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாடல் அழகி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரபல தாதா சந்தீப் கடோலி. இவரது காதலி மாடல் அழகி திவ்யா பஹுஜா. இந்த சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதா சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணையில், அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அந்த வகையில், மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திவ்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை. இதுகுறித்து திவ்யா குடும்பத்தினர் குருகிராம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திவ்யாவுக்கும், ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்ததை திவ்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர், அப்புகைப்படங்களைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இதில் ஏற்பட்ட மோதலில், அபிஜித் சிங் துப்பாக்கியால் திவ்யாவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸில் சிக்கினர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி சந்தீப்பின் சகோதரர் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், அபிஜித் சிங் கூலிப்படையாக செயல்பட்டு, திவ்யாவை சுட்டுக் கொன்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Shoot deadFake EncounterModel queen
Share
Tweet
SendShare
Previous Post

மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா! 

Next Post

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies