போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!
Jul 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாடல் அழகி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரபல தாதா சந்தீப் கடோலி. இவரது காதலி மாடல் அழகி திவ்யா பஹுஜா. இந்த சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதா சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணையில், அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அந்த வகையில், மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திவ்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை. இதுகுறித்து திவ்யா குடும்பத்தினர் குருகிராம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திவ்யாவுக்கும், ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்ததை திவ்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர், அப்புகைப்படங்களைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இதில் ஏற்பட்ட மோதலில், அபிஜித் சிங் துப்பாக்கியால் திவ்யாவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸில் சிக்கினர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி சந்தீப்பின் சகோதரர் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், அபிஜித் சிங் கூலிப்படையாக செயல்பட்டு, திவ்யாவை சுட்டுக் கொன்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Shoot deadFake EncounterModel queen
ShareTweetSendShare
Previous Post

மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா! 

Next Post

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies