தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! - அண்ணாமலை
Aug 15, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 5, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து திமுக கொள்ளையடிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

கெங்கவல்லி ஓமலூர் பகுதிகள், மைசூருடன் இணைக்கும் கணவாய் அமைந்துள்ள முக்கியமான பகுதிகளாக விளங்கின. ரோஜா, சாமந்தி, மல்லிகைப் பூ என 5,000 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெறும் மண். திருப்பதி பகவான் ஏழுமலையானை அலங்கரிக்கும் சாமந்திப்பூ, ஓமலூரிலிருந்து செல்கிறது என்பது இந்த மண்ணுக்குப் பெருமை.

வரும் ஜனவரி 22 அன்று, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் பக்தர்கள் நிதி வழங்கி, ராமர் கோவிலை எழுப்பியுள்ளார்கள். கோவிலுக்கு அதிகம் நிதி வழங்கியதில், தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ராமருக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என்கிறார்கள். ராமர் வைகுண்டம் சென்றடைய, சரபங்கா முனிவர் யாகம் நடத்திய மண் ஓமலூர்.

அவர் பெயரிலேயே சரபங்கா நதியும் இங்கு உள்ளது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், வசந்தீஸ்வரர் கோவில்கள் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு இருந்து கொண்டு, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிறார்கள்.

இத்தனை அற்புதமான கலாச்சாரமும், சரித்திரமும் உடைய நம் தமிழகத்தில், ஜாதியை வைத்து அரசியல் செய்து, மக்களைப் பிரித்து சூழ்ச்சி செய்து, ஜாதி அரசியல் இன்றும் தமிழகத்தில் இருக்கக் காரணம், திமுக மட்டும்தான்.

இத்தனை ஆண்டு காலமாக போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாக நம் மண்ணில் இருந்து புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிலவியது. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து, உலக அரங்கில் நமது நாடு பின்தங்கி இருந்தது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, உலக அரங்கில் இந்தியா பல மடங்கு முன்னேறியிருக்கிறது.

ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நேர்மையான நல்லாட்சி கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பாரதப் பிரதமரை ஆதரிக்கிறார்கள். பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களால் பயனடைந்துள்ளார்கள்.

சேலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், மக்களுக்காக எந்தப் பணிகளும் செய்யவில்லை. மத்திய அரசின் திட்டங்களை தனது பெயரில் காட்டிக்கொள்கிறார். திமுக அரசில் உள்ள 35 அமைச்சர்களில், 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி தண்டிக்கப்பட்டு விரைவில் சிறை செல்வார். இன்னும் பல அமைச்சர்கள் சிறையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமே ஊழல் வழக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பட்டியலைக் கேட்டுள்ளது.

நம்முடைய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் கடைசி பத்து சதவீதத்தில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை, அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஏழு தலைமுறை ஆகிறது என்று சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில் படித்தோம்.

ஏழைகள் ஏழைகளாகவே தொடர்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கிறார்கள். முன்னாள் நிதியமைச்சர், முதலமைச்சரின் மகனும் மருமகனும் 30,000 கோடி சம்பாதித்துள்ளார்கள் என்று பேசினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. ஓமலூர் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார், மணல் கடத்தலைத் தடுத்ததற்காக கொடூரமாக வெட்டப்பட்டார். கிராம அலுவலர்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது.

2.69 லட்சம் கோடி கடன் கடந்த 31 மாதங்களில் அதிகமாகியிருக்கிறது. மொத்தம் 8,34,544 கோடி கடன், இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம், ஒரு ரேஷன் அட்டை மீது 3.81 லட்சம், இந்தக் கடன் நம் மீதுதான் விழுந்திருக்கிறது. புதியதாக கடன் வாங்காமல், இந்தக் கடனைத் தீர்க்கவே 87 ஆண்டுகள் ஆகும். இவர்கள் ஊழல் செய்து சம்பாதிக்க, நம் வருங்கால தலைமுறைகளையே கடனுக்குள்ளாக்கியிருக்கிறார். ஒரு குடும்பம் மட்டுமே பயனடைய நடக்கும் இது தான் திராவிட மாடல் ஆட்சி.

இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அதற்கு முதல்படி.

காஷ்மீர் 370 சட்டத் திருத்தம் உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தைரியமாக முடிவெடுக்க, பாஜக பெரும்பான்மையாக ஆட்சியில் இருப்பதே முக்கியக் காரணம். மேலும் வரும் காலத்தில் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்கும் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழகமும் வரும் பாராளுமன்றத் தேர்தலில்  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!

Next Post

இந்திய பணக்காரர் பட்டியல் : தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம்!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies