கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!
Jul 25, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கருக்கு அன்பு பரிசாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வழங்கினார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்ததால் கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக கொடுக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கர் வீரர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் விளாசி இந்தியாவைத் தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மேலும் 2வது போட்டியில் பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்குப் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கிரிக்கெட் வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் 5000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த அவர் தென் ஆப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்குப் போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார்.

முன்னதாக 2வது இன்னிங்சில் எல்கர் அவுட்டாகி செல்லும்போது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டி அவருக்குத் தலைவணங்குமாறு கேட்டுக்கொண்ட விராட் கோலி தற்போது ஜெர்சியை பரிசளித்து தன்னை மனதளவிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதேபோல ஒட்டுமொத்த இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்புப் பரிசாக கேப்டன் ரோகித் சர்மா டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 சிறந்த இந்திய வீரர்கள் டீன் எல்கருக்கு நெஞ்சைத் தொடும் பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் நேற்றையப் போட்டியில் மற்றொரு பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஆம் நேற்றையப் போட்டி முடிந்த உடன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு பரிசளித்தார்.

Tags: virat kohlirohith sharmaindia vs southafrica
ShareTweetSendShare
Previous Post

15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்: மீட்க விரைந்த இந்திய போர்க்கப்பல்!

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies