கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கருக்கு அன்பு பரிசாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வழங்கினார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்ததால் கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக கொடுக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா வீரர் டீன் எல்கர் வீரர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் விளாசி இந்தியாவைத் தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மேலும் 2வது போட்டியில் பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்குப் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கிரிக்கெட் வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் 5000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த அவர் தென் ஆப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்குப் போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார்.

முன்னதாக 2வது இன்னிங்சில் எல்கர் அவுட்டாகி செல்லும்போது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டி அவருக்குத் தலைவணங்குமாறு கேட்டுக்கொண்ட விராட் கோலி தற்போது ஜெர்சியை பரிசளித்து தன்னை மனதளவிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதேபோல ஒட்டுமொத்த இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்புப் பரிசாக கேப்டன் ரோகித் சர்மா டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 சிறந்த இந்திய வீரர்கள் டீன் எல்கருக்கு நெஞ்சைத் தொடும் பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் நேற்றையப் போட்டியில் மற்றொரு பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஆம் நேற்றையப் போட்டி முடிந்த உடன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு பரிசளித்தார்.

Tags: virat kohlirohith sharmaindia vs southafrica
ShareTweetSendShare
Previous Post

15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்: மீட்க விரைந்த இந்திய போர்க்கப்பல்!

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies