15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்: மீட்க விரைந்த இந்திய போர்க்கப்பல்!
Apr 29, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்: மீட்க விரைந்த இந்திய போர்க்கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டிருக்கும் நிலையில், அக்கப்பலை மீட்பதற்காக ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் விரைந்திருக்கிறது.

மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்குக் கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டது. இக்கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “லைபீரிய நாட்டின் கொடி பறந்த MV LILA NORFOLK என்ற சரக்குக் கப்பல் சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், இக்கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

இக்கப்பல், நேற்று மாலை 5 முதல் 6 மணிக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரையுள்ள நபர்கள், ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தி இருக்கிறார்கள்.

இதையடுத்து, இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்தது. கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. அதோடு, கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலும் திருப்பி விடப்பட்டது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை இந்திய கடற்படை விமானம் இன்று அதிகாலை கண்டறிந்ததோடு, அதனை கண்காணித்து வருகிறது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.

இந்த சூழலில், கடத்தப்பட்ட கப்பலை ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் நெருங்கி விட்டது. இந்த கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பை மேற்கொள்ளும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: hijackedsomaliyaCargo Ship
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர்! – அண்ணாமலை

Next Post

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற வீரருக்கு இந்திய அணியின் பரிசு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies