ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Sep 30, 2025, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Web Desk by Web Desk
Jan 5, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் கயானா குடியரசின் இயற்கை வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரம்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, கயானாவில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுதல், கயானாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, திறன் மேம்பாடு, இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், இயற்கை எரிவாயு துறையில் ஒத்துழைப்பு, கயானாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒழுங்குமுறை கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் துறையின் முழுமையான அம்சங்களை  உள்ளடக்கியது. உயிரி எரிபொருள் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில்  அடங்கியுள்ளது.

தாக்கம்:

கயானாவுடனான ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும், ஒருவருக்கொருவர் முதலீடுகளை ஊக்குவிக்கும், மேலும்  கச்சா எண்ணெய் ஆதாரத்தைப் பன்முகப்படுத்த உதவும், இதனால் நாட்டின் எரிசக்தி மற்றும் விநியோகப் பாதுகாப்பை அதிகரிக்கும்.

இது இந்திய நிறுவனத்திற்கு கயானாவின் சம்பந்தப்பட்ட துறையில் பங்கேற்க வாய்ப்பளிக்கும், மேல்நிலை திட்டங்களில் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அனுபவத்தைப் பெற வழிவகுக்கும், இதன் மூலம் “தற்சார்பு இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modicentral government cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

இந்திய பணக்காரர் பட்டியல் : தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம்!

Next Post

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies