மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 
Feb 9, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.  மெட்ரோ ரயிலில் பயணிப்போர் குறித்து தவறான தகவல்களை தனியார் இதழில், வழங்கியுள்ளததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளிலும் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

23 டிசம்பர் 2023 தேதியிட்ட தனியார் பொருளாதார இதழில், “இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ கட்டமைப்பு போதுமான பயணிகளை ஈர்க்கத் தவறிவிட்டது” என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.  இந்தக் கட்டுரை, தவறான தகவல்களை வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள மெட்ரோ அமைப்புகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு  கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒன்றே கால் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளும் தற்போது லாபத்தை ஈட்டுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு பொதுப்போக்குவரத்து முறையும் முக்கியமானது. வசதியான, நம்பகமான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து முறைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

பன்னோக்கு போக்குவரத்து முறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதற்காக அரசு சமீபத்தில் பிரதமரின் இ-பஸ் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதில் 5 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நகர்ப்புறங்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிறந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது.  மெட்ரோ ரயில் அமைப்புகள் பெண்கள் மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான பயண முறையாக உள்ளது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: metro train
ShareTweetSendShare
Previous Post

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்: டி.ஜி.பி.க்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்!

Next Post

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

Related News

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்திய மத்திய அரசு!

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை – இலங்கை தமிழர்கள் வேதனை

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

திரைப்பட பாடல்களுக்கு ஒருமணி நேரம் இடைவிடாமல் நடமானடிய மாணவர்கள்!

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம் – கடம்பூர் ராஜு

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies