ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!
Jun 15, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்றும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, காவல்துறைக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் தரப்பில், எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதுபோன்ற அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும்போது, பேனர்கள், பதாகைகள் எடுத்துச் செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏதேனும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், வைப்புத் தொகையை திருப்பிப் பெற முடியாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags: high courtOrderRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 

Next Post

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies