இலங்கையின் திடீர் மாற்றம்: சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அதிரடித் தடை!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையின் திடீர் மாற்றம்: சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அதிரடித் தடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது.

இலங்கை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. எனவே, இங்குள்ள கொழும்பு துறைமுகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனாவின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

குறிப்பாக, சீனாவில் இருந்து ஷின்யான் 1, 2, 3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1, 3, 6, 16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றன. இந்த சூழலில், கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் “ஷி யான் 6” எனும் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், 2022-ல் “யுவான் வாங் 5” எனும் சீன கப்பல், இலங்கையின் தெற்கே உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தில் 7 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த உளவுக் கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நிலைகளையும் கண்காணிக்க இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படலாம் என்கிற கவலையை இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் எழுப்பி வந்தது.

குறிப்பாக, இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீன கருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருப்பதால் சீனக் கப்பல்களை நிறுத்த இந்தியா கடும் எதிர்ப்பும் தெரிவித்தது.

மேலும், சீன உளவுக் கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனாலும், இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு சீனக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது. இதற்கு, இந்தியாவும், அமெரிக்காவும் கவலை தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான “சியாஸ் யாஸ் ஹாஸ்-3” என்ற கப்பலை இம்மாதம் 5-ம் தேதி முதல் மே மாதம் வரை நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப் போவதாக சீனா கூறியது.

இப்படிப்பட்ட சூழலில்தான், சீனக் கப்பல் இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் இக்கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. எந்தவொரு ஆராய்ச்சிக் கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிலுக கதுருகமுவ கூறுகையில், “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடைக் காலம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: srilankachina shipBanned
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies