உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா"வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!
May 21, 2025, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் உயரமான “புர்ஜ் கலிஃபா”வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் “புர்ஜ் கலிஃபா”வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போகிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் 2,717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டடமான “புர்ஜ் கலிஃபா” (Burj Khalifa) அமைந்திருக்கிறது.

2004-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், 2009-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

இந்த புர்ஜ் கலீஃபாவைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். மேலும், பெரிய பெரிய நிறுவனங்கள் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதை பெருமையைகக் கருதுகின்றன.

இந்த நிலையில்தான், உலகின் உயரமான கட்டடம் என்கிற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம், இதை விட உயரமாக கட்டடத்தைக் கட்ட சௌதி அரேபியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சௌதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா. இந்நகரின் வடக்கே ஜெட்டா எகனாமிக் சிட்டி எனும் பெயரில் நகர மேம்படுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு, கிங்க்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் உலகில் இதுவரை இல்லாத கட்டடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை சௌதி அரேபிய இளவரசர் அல் வலீத் பின் தலால் மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். இக்கட்டடத்தை வடிவமைப்பவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் என்கிற கட்டட வடிவமைப்பாளர்.

இவர்தான், புர்ஜ் கலிஃபா கட்டடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழி முறைகளைக் கையாண்டு இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தின் 157-வது மாடியில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், நகரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கமும் அமையவிருக்கிறது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது, 3,281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகிலேயே ஒரு கிலோ மீட்டர் உயரம் கொண்ட முதல் கட்டடம் என்னும் புகழைப் பெறும் என்கிறார்கள்.

Tags: dubaiBurj KhalifaTallest towerWill Beatsaudi arabia
ShareTweetSendShare
Previous Post

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

Next Post

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

Related News

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

டாஸ்மாக் ஊழலில் முதல்வர், அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு தொடர்பு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies