உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா"வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் உயரமான “புர்ஜ் கலிஃபா”வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் “புர்ஜ் கலிஃபா”வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போகிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் 2,717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டடமான “புர்ஜ் கலிஃபா” (Burj Khalifa) அமைந்திருக்கிறது.

2004-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், 2009-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

இந்த புர்ஜ் கலீஃபாவைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். மேலும், பெரிய பெரிய நிறுவனங்கள் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதை பெருமையைகக் கருதுகின்றன.

இந்த நிலையில்தான், உலகின் உயரமான கட்டடம் என்கிற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம், இதை விட உயரமாக கட்டடத்தைக் கட்ட சௌதி அரேபியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சௌதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா. இந்நகரின் வடக்கே ஜெட்டா எகனாமிக் சிட்டி எனும் பெயரில் நகர மேம்படுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு, கிங்க்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் உலகில் இதுவரை இல்லாத கட்டடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை சௌதி அரேபிய இளவரசர் அல் வலீத் பின் தலால் மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். இக்கட்டடத்தை வடிவமைப்பவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் என்கிற கட்டட வடிவமைப்பாளர்.

இவர்தான், புர்ஜ் கலிஃபா கட்டடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழி முறைகளைக் கையாண்டு இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தின் 157-வது மாடியில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், நகரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கமும் அமையவிருக்கிறது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது, 3,281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகிலேயே ஒரு கிலோ மீட்டர் உயரம் கொண்ட முதல் கட்டடம் என்னும் புகழைப் பெறும் என்கிறார்கள்.

Tags: saudi arabiadubaiBurj KhalifaTallest towerWill Beat
Share
Tweet
SendShare
Previous Post

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

Next Post

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies