மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!
Oct 26, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

நவீன காலத்தில் சம்பிரதாயமான வாழ்த்துக்கள்!

Web Desk by Web Desk
Jan 15, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை வாங்க நகரங்களுக்கு செல்வதும் உண்டு.

அதனை வாழ்த்து அட்டை என்று சாதாரணமாக கூறி விட முடியாது. அழகான புகைப்படம், அர்த்தமுள்ள வாக்கியம் என பார்த்து பார்த்து வாங்கிய காலத்தை மறக்க முடியாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நம்மை பிடித்தவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்வது உண்டு. அதில் செதுக்கும் அந்த சில வரிகளுக்காக பல மணிநேரம் யோசிப்பது உண்டு. ஏன் நாள் கணக்கில் சிந்தனை செய்வதும் உண்டு.

நாம் அனுப்பிய வாழ்த்து அட்டை சென்று சேர்ந்து  விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தபால்காரரிடம் சந்தேகங்களை கேட்டு பலர் நச்சரிப்பதும் உண்டு. அவ்வளவாக தொலைபேசி வசதி இல்லாத அந்த காலத்தில் பதில் கடிதம் வந்தால் தான், வாழ்த்து அட்டை சென்று சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த அட்டையில் காதல், சோகம், ஏக்கம்,இன்பம்,பாசம் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

தொலைபேசி வசதி வந்த நிலையில், வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய தொடங்கியது. ஏராளமானோர் தொலைபேசியில் பொங்கல்,  தீபாவளி,புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

அதனைத்தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்புவது  பிரபலமானது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொலைபேசி நிறுவனங்கள் பண்டிகை நேரத்தில் வாழ்த்து அனுப்பினால் அதற்கென தனிக்கட்டணங்களை வசூலிக்க தொடங்கின. நாம் என்ன சளைத்தவர்களா? பண்டிக்கைக்கு முன்னதாகவே வாழ்த்துக்களை அனுப்பி அதில் ஒரு சிறிய சுகம் காண்போம்.

தற்போது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, மெயில் என வாழ்த்துக்களை அனுப்ப ஏராளமான வசதிகள் வந்து விட்டன. அதனால் வாழ்த்து அனுப்புவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பியது தனி சுகம் தான்.

Tags: Twitterpongalpongal wishpongal cardinstanew year wish card
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Next Post

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies