பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !
May 13, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் பொங்கல் திருநாள் தான்.

பொங்கல் அன்று பல வண்ணங்களில் புத்தாடை அணிந்து, வண்ண வண்ண கோலமிட்டு கொண்டாடுவோம். மற்ற நாட்களில் வண்ண கோலமிடுவதை விட பொங்கல் அன்று தான் அனைவரின் வீட்டிலும் வண்ண கலர் கொடுத்து கோலமிடுவர்.

பல கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகளும் கூட வைக்கபடும். மற்ற நாட்களில் பகலில் தான் கோலமிடுவோம். ஆனால் பொங்கல் திருநாளில் தெருவில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் வீட்டிற்கு முன்பே இரவிலேயே கோலமிடுவர்.

பல பெண்கள் இப்படி கோலமிடுவதற்காகவே பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். இப்படி பொங்கல் திருநாளில் கோலத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு.

இந்த கோலங்கள், கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளிக் கோலங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன.

5 வயதை கடக்கும்போது கோலமிடப் பழகும் சிறுமிகள், 90 வயது முதுமையிலும் தங்களது வீ்ட்டின் முற்றத்தில் ஆர்வத்தோடு கோலமிடுகிறார்கள். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது. பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் வீட்டின் வாசலில் ரங்கோலி கோலங்கள் போடுவதால் நல்ல எண்ணங்கள் தோன்றுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. கோலங்களில் வண்ணமிடுவதால் அந்த கோலம் அழகாக மாறுகிறது. எனினும் அந்த நிறங்கள் மனிதர்களின் எண்ணங்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆகவே வண்ண வண்ண கோலமிட்டு இப்பொங்கல் பண்டிகையை வண்ண மையமாக கொண்டாடுவோம்

Tags: rangoliPongal festival
ShareTweetSendShare
Previous Post

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

Next Post

பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!

Related News

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More

அண்மைச் செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies