பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சீனா, அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பூட்டான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தையும் சீனா ஆட்டைய போட்டிருக்கிறது.

சீனாவை பொறுத்தவரை, தனது அண்டை நாட்டு எல்லைகளை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, மியான்மர், வியட்நாம், நேபாள், பூட்டான் மற்றும் கடல் பகுதியில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா என தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது.

அதேபோல, திபெத் பீடபூமியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், சீனாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் எல்லை தொடர்பான மோதல்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூட்டானை தனது ஆக்டோபஸ் கரங்களால் சீனா ஆக்கிரமித்து வருகிறது.

பூட்டானை எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் தலைநகர் டெல்லியைவிட பரப்பளவில் சிறியது. அப்படி இருக்க, பூட்டானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு பகுதிகளை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்களையும் கட்டி வருகிறது.

இந்த நிலையில், பூட்டானின் பெயுல் கென்பஜாங்க் எனப்படும் கலாசார தொடர்புடைய நிலப்பகுதியை தற்போது சீனா ஆக்கிரமித்து வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள இடங்களில் ஏராளமான குடியிருப்புக் கட்டடங்களை சீனா கட்டி வருகிறது.

பொதுவாகவே, சீனா பிற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது, அப்பகுதிகளில் கட்டடங்களை கட்டி, தனது நாட்டு மக்களை அங்கு குடியமர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல, பூட்டானின் ஆக்கிரமிப்புப் பகுதியிலும் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது, ‘சாட்டிலைட்’ படங்கள் வாயிலாக தெரியவந்திருக்கிறது.

இந்த சூழலில், சீனா ஆக்கிரமித்த அந்தப் பகுதி, பூட்டான் அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத நிலையில் பூட்டான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், இதுபோல அந்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

Tags: chinaOccupiedBhutan land
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!

Next Post

புரோ கபடி : தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies