கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!
Sep 9, 2025, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப் படையின், ‘சி-130 ஜே’ சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கி இருக்கிறது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கார்கில் மாவட்டம், மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் தலைநகரம் கார்கில். இந்த நகரின் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கும்.

குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கும் கீழ் செல்லும். இப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் சமீபத்தில் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.

விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என்று தெரிவித்திருக்கிறது.

போர் காலத்தின்போது எதிரிகளுக்குத் தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீரென சென்று தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், மலைப்பாங்கான பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இந்த சாதனை அமைந்திருக்கிறது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் உட்பட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அனைத்து விமான நிலையங்களின் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில், இராணுவ அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தவுலத் பெக் ஓல்டி மற்றும் நியோமா விமான ஓடுதளங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 16,700 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதுதான், உலகின் மிக உயரமான விமான ஓடுதளம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல, நியோமா விமான ஓடுதளம் 13,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

Tags: landKargil hillAirforce PlaneNight time
ShareTweetSendShare
Previous Post

2 மாநிலங்களில் 72.72% கொரோனா பாதிப்பு!

Next Post

ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies