கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!
Sep 20, 2026, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விமானப் படையின், ‘சி-130 ஜே’ சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கி இருக்கிறது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கார்கில் மாவட்டம், மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் தலைநகரம் கார்கில். இந்த நகரின் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கும்.

குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கும் கீழ் செல்லும். இப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் சமீபத்தில் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.

விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என்று தெரிவித்திருக்கிறது.

போர் காலத்தின்போது எதிரிகளுக்குத் தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீரென சென்று தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், மலைப்பாங்கான பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இந்த சாதனை அமைந்திருக்கிறது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் உட்பட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அனைத்து விமான நிலையங்களின் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில், இராணுவ அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தவுலத் பெக் ஓல்டி மற்றும் நியோமா விமான ஓடுதளங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 16,700 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதுதான், உலகின் மிக உயரமான விமான ஓடுதளம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல, நியோமா விமான ஓடுதளம் 13,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

Tags: landKargil hillAirforce PlaneNight time
Share
Tweet
SendShare
Previous Post

2 மாநிலங்களில் 72.72% கொரோனா பாதிப்பு!

Next Post

ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies