கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!
Apr 29, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப் படையின், ‘சி-130 ஜே’ சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கி இருக்கிறது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கார்கில் மாவட்டம், மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் தலைநகரம் கார்கில். இந்த நகரின் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கும்.

குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கும் கீழ் செல்லும். இப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் சமீபத்தில் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.

விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என்று தெரிவித்திருக்கிறது.

போர் காலத்தின்போது எதிரிகளுக்குத் தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீரென சென்று தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், மலைப்பாங்கான பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இந்த சாதனை அமைந்திருக்கிறது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் உட்பட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அனைத்து விமான நிலையங்களின் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில், இராணுவ அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தவுலத் பெக் ஓல்டி மற்றும் நியோமா விமான ஓடுதளங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 16,700 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதுதான், உலகின் மிக உயரமான விமான ஓடுதளம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல, நியோமா விமான ஓடுதளம் 13,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

Tags: landKargil hillAirforce PlaneNight time
ShareTweetSendShare
Previous Post

2 மாநிலங்களில் 72.72% கொரோனா பாதிப்பு!

Next Post

ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies