காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!
Sep 30, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள், மண்டலத் தலைவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு அமர்வில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய குற்றவியல் சட்டங்கள் ‘முதலில் குடிமகன், முதலில் கண்ணியம், முதலில் நீதி’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் நிலைநாட்டப்படும். மேலும், அவர்களது பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குடிமக்கள் மத்தியில் காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

குடிமக்களின் நலனுக்காக நேர்மறையான தகவல்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு காவல் நிலைய அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். எல்லைக் கிராமங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் எல்லைக் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பான சேவைகளுக்கான காவல்துறை பதக்கத்தை வழங்கிய பிரதமர் மோடி, அரபிக்கடலில் இந்திய கடற்படையின் விரைவான நடவடிக்கையையும், ஆதித்யா எல்-1 வெற்றியையும் பாராட்டினார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், “இந்திய கடற்படை மிகுந்த துணிச்சலுடன் தங்கள் கடமையை நிறைவேற்றியது.

அரபிக்கடலில் வணிகக் கப்பலில் இருந்து தங்களுக்கு நெருக்கடியான அழைப்பு வந்தவுடன், கடற்படை மற்றும் கடற்படை கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 15 இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆதித்யா எல்-1, சுமார் 15 லட்சம் கி.மீ. பயணம் செய்து தனது இறுதி இலக்கை உத்தேசித்த நேரத்தில் அடைந்திருக்கிறது. சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றி இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு சான்று” என்று பிரதமர் கூறினார்.

மாநாட்டில், சைபர் கிரைம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: PM ModiRajastanDGPs Conferenceadresses
ShareTweetSendShare
Previous Post

லட்சத்தீவு குறித்த தேடல்கள் 3,400% உயர்வு!

Next Post

திகாரில் செந்தில் பாலாஜி – திசை மாறும் வழக்கு!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies