காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!
Nov 15, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள், மண்டலத் தலைவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு அமர்வில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய குற்றவியல் சட்டங்கள் ‘முதலில் குடிமகன், முதலில் கண்ணியம், முதலில் நீதி’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் நிலைநாட்டப்படும். மேலும், அவர்களது பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குடிமக்கள் மத்தியில் காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

குடிமக்களின் நலனுக்காக நேர்மறையான தகவல்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு காவல் நிலைய அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். எல்லைக் கிராமங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் எல்லைக் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பான சேவைகளுக்கான காவல்துறை பதக்கத்தை வழங்கிய பிரதமர் மோடி, அரபிக்கடலில் இந்திய கடற்படையின் விரைவான நடவடிக்கையையும், ஆதித்யா எல்-1 வெற்றியையும் பாராட்டினார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், “இந்திய கடற்படை மிகுந்த துணிச்சலுடன் தங்கள் கடமையை நிறைவேற்றியது.

அரபிக்கடலில் வணிகக் கப்பலில் இருந்து தங்களுக்கு நெருக்கடியான அழைப்பு வந்தவுடன், கடற்படை மற்றும் கடற்படை கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 15 இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆதித்யா எல்-1, சுமார் 15 லட்சம் கி.மீ. பயணம் செய்து தனது இறுதி இலக்கை உத்தேசித்த நேரத்தில் அடைந்திருக்கிறது. சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றி இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு சான்று” என்று பிரதமர் கூறினார்.

மாநாட்டில், சைபர் கிரைம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: PM ModiRajastanDGPs Conferenceadresses
ShareTweetSendShare
Previous Post

லட்சத்தீவு குறித்த தேடல்கள் 3,400% உயர்வு!

Next Post

திகாரில் செந்தில் பாலாஜி – திசை மாறும் வழக்கு!

Related News

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies