காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!
Sep 14, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 07:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள், மண்டலத் தலைவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு அமர்வில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய குற்றவியல் சட்டங்கள் ‘முதலில் குடிமகன், முதலில் கண்ணியம், முதலில் நீதி’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் நிலைநாட்டப்படும். மேலும், அவர்களது பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குடிமக்கள் மத்தியில் காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

குடிமக்களின் நலனுக்காக நேர்மறையான தகவல்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு காவல் நிலைய அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். எல்லைக் கிராமங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் எல்லைக் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பான சேவைகளுக்கான காவல்துறை பதக்கத்தை வழங்கிய பிரதமர் மோடி, அரபிக்கடலில் இந்திய கடற்படையின் விரைவான நடவடிக்கையையும், ஆதித்யா எல்-1 வெற்றியையும் பாராட்டினார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், “இந்திய கடற்படை மிகுந்த துணிச்சலுடன் தங்கள் கடமையை நிறைவேற்றியது.

அரபிக்கடலில் வணிகக் கப்பலில் இருந்து தங்களுக்கு நெருக்கடியான அழைப்பு வந்தவுடன், கடற்படை மற்றும் கடற்படை கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 15 இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆதித்யா எல்-1, சுமார் 15 லட்சம் கி.மீ. பயணம் செய்து தனது இறுதி இலக்கை உத்தேசித்த நேரத்தில் அடைந்திருக்கிறது. சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றி இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு சான்று” என்று பிரதமர் கூறினார்.

மாநாட்டில், சைபர் கிரைம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: PM ModiRajastanDGPs Conferenceadresses
Share
Tweet
SendShare
Previous Post

லட்சத்தீவு குறித்த தேடல்கள் 3,400% உயர்வு!

Next Post

திகாரில் செந்தில் பாலாஜி – திசை மாறும் வழக்கு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies