ரஞ்சி கோப்பை : முதல் போட்டியில் தமிழக அணி தோல்வி!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஞ்சி கோப்பை : முதல் போட்டியில் தமிழக அணி தோல்வி!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் – மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.

இதில் தமிழக அணி சாய் கிஷோர் தலைமையில் களமிறங்கியது. கடந்த சீசனிலேயே சில போட்டிகளில் சாய் கிஷோர் தமிழக அணியை வழிநடத்தி இருந்ததால், இம்முறை அவர் முழு நேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் முதல் போட்டியில் தமிழகம் அணியுடன் குஜராத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

அந்த அணியின் உமாங் குமார் 76 ரன்களையும், மனன் 65 ரன்களையும் சேர்த்தார். அதேபோல் தமிழக அணியில் முகமது 5 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய தமிழக அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

119 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பவுலிங்கில் அசத்திய முகமது அதிரடியாக விளையாடி 85 ரன்களையும், சந்தீப் வாரியர் 38 ரன்களையும் சேர்த்தனர்.

இதனால் தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி 312 ரன்களை விளாசியது.

அந்த அணியின் உமாங் குமார் 89 ரன்களையும், ரிப்பல் படேல் 81 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலமாக தமிழக அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்பின் களமிறங்கிய தமிழக அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களிலும், கேப்டன் சாய் கிஷோர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த பாபா இந்திரஜித் 39 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் 39 ரன்களும், விஜய் சங்கர் 16 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 168 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த டெய்லண்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தமிழக அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. டிரா செய்ய முடியாமல் முதல் போட்டியிலேயே தமிழக அணி தோல்வியடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Crickettaminadu
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் டி20 அணியில் கேப்டன் யார்?

Next Post

நானோ யூரியாவை அதிகமாகப் பயன்படுத்துங்கள்! – பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies