பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!
Aug 19, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 08:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சத்தீஸ்கரின் காங்கேரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  பூமிகா பூராயா, பிரதமருடன் உரையாடியபோது, தனது கிராமத்தில் உள்ள 29 வன வருவாய் திட்டக் குழுக்களில் ஒன்றில் செயலாளராக பணியாற்றுவதாகவும், வனத்திலிருந்து செல்வம் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், நீர்வளத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, குடும்ப அட்டை, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பூமிகா அனைத்து அரசுத் திட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதை அடுத்து பிரதமரின் கவனத்தை பெற்றார்.

மக்களுக்காக பணியாற்ற இது அரசு நடவடிக்கைகளை அதிக அளவில் வலுப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார். சரியான நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பூமிகாவிடம் அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், அவரது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து கேட்டறிந்தார். தற்போது கல்லூரியில் படிக்கும் தனது தம்பி உட்பட இரு குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதில் அவரது பெற்றோரின் பங்களிப்பை பாராட்டிய மோடி, குழந்தைகளின் கல்வியில் கிராமத்தின் மற்ற குடியிருப்பாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மஹ்வா லட்டு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் தனது சுய உதவி வன வருவாய் திட்ட குழுமம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார், அவை ஒரு கிலோ
ரூ.700-க்கு விற்கப்படுவதாக கூறினார்.

அனைத்து நன்மைகளும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்துள்ளதாக திருப்தி தெரிவித்த பிரதமர் மோடி, போதைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மஹ்வாவை சரியான முறையில் பயன்படுத்துவதில் அவரது முயற்சிகளையும் பாராட்டினார். “பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் மேம்பாட்டிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது” என்று கூறிய பிரதமர், வன வருவாய் திட்ட குழுவினர் உருவாக்கிய நேர்மறையான முடிவுகளுக்கு பூமிகாவை பாராட்டினார்.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியின மக்களுக்கான திட்டம் பற்றி அவர் தெரிவித்தார், இது பழங்குடி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

Next Post

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies