திமுகவுக்கு கடலில் பேனா சிலை வைக்க காசு இருக்கு மேட்டூர் அணையில் தூர்வார காசு இல்லை! - அண்ணாமலை கேள்வி
Jan 14, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு கடலில் பேனா சிலை வைக்க காசு இருக்கு மேட்டூர் அணையில் தூர்வார காசு இல்லை! – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்ன தகுதி இருக்கு, தன்னை டெல்டா காரன் என்று கூறிகொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

புகழ்பெற்ற மேட்டூர் அணை மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல எதிர்ப்புகளைக் கடந்து, 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறது.

தமிழகம் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்க முக்கிய காரணம் மேட்டூர் அணை. கடந்த 2022 ஆம் ஆண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க போதிய கொள்ளளவு இல்லாமல் சுமார் 500 TMC தண்ணீர், (சுமார் 14 லட்ச கோடி லிட்டர்) கடலில் வீணாக கலந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக அரசின் நீர்வளத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மேட்டூர் அணையை தூர்வாரினால், கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் அணையில் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறியிருந்தனர்.

கடலில் கலக்கும் நீரை, மேட்டூர் அணையில் சேமித்து வைத்தால், விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்பதற்காகத் தான் இந்த தூர்வாரும் திட்டம். ஆனால் அரசிடம் நிதி இல்லை என்று கூறி இந்த திட்டத்தை நிராகாரித்துவிட்டது திமுக அரசு.

கடலில் பேனா சிலை வைக்க, சென்னையில் கார் பந்தயம் நடத்த, மத்திய அரசின் திட்டத்திற்கு புதிதாக தமிழ் பெயர் வைத்து, அதற்கு ஒரு விழா எடுத்து வீண் விளம்பரம் செய்ய, குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலா செல்ல, முதலமைச்சரின் தந்தை கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்காகவே கட்டாயமாக ஒரு கட்டிடம் எழுப்ப என வீண் செலவுகள் அனைத்துக்கும் திமுக அரசிடம் பணம் இருக்கிறது.

மேட்டூர் அணையை தூர் வார அரசிடம் பணம் இல்லை. இந்த லட்சணத்தில் தன்னை டெல்டா காரன் என்று கூறிகொள்கிறார் முதல்வர்.

மேட்டூரில் தோனி மடுவு திட்டத்தின் கீழ் ஒரே ஒரு தடுப்பணை கட்டினால், மேட்டூர் தொகுதி உட்பட்ட கொளத்தூர் மற்றும் அந்தியூர் பகுதிகளில் மேலும் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மேட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர் அணையில் தற்காலிகமாகவும், பகுதி நேரமாகவும் தொகுப்பூதியத்திலும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் பணி நிரந்தரம், மேச்சேரியில் குளிர்பதனக் கிடங்கு, மேச்சேரியில் தக்காளி பழத் தொழிற்சாலை, தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் தற்போது உள்ள இடத்திலேயே விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கல் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய மேச்சேரி வழியாக தொப்பூர் -மேட்டூர் -பவானி -ஈரோடு வரை 94 கிலோமீட்டர் நிலத்திற்கான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு, நமது மத்திய அரசு 118 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

63,828 பேருக்கு பிரதமரின் வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,20,539 பேருக்கு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், சேலம் மாவட்டத்திற்கு 6682 கோடி ரூபாய் முத்ரா கடன் என மத்திய அரசு நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான பொதுமக்களைச் சென்றடைந்துள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், மோடி என்ற அற்புதமான தலைவர் போட்டியிடுகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் நலனை முன்னிறுத்தி, நல்லாட்சியின் இலக்கணமாக விளங்கும் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkaldmk fails
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிரசவம்! 

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies