அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!
Mar 15, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் அக்கட்சித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாகவே இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தது. இது கடந்த 6 மாதங்களாக உச்சத்தை அடைந்த நிலையில், பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க.வின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, பா.ஜ.க. தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், அ.தி.மு.க. கூட்டணி தேவையா என்பது குறித்து தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் கட்சியின் டெல்லித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 15 பேருக்கு கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்கடிதத்தில், “தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டுமா அல்லது தனித்தே போட்டியிடலமா? மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து கருத்துக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தங்களது கருத்தை எழுதி டெல்லித் தலைமைக்கு தபாலில் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, “பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நாங்களும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதிருந்து கூறி வருகிறோம்.

இந்த சூழலில்தான், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுக்கு, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா?

சிறிய கட்சிகளின் நிலை என்ன? அ.தி.மு.க.வுடனான உறவு எப்படி உள்ளது? அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா? என்பது உள்ளிட்ட 12 கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சி மேலிடம் கேட்டிருக்கிறது. நிர்வாகிகளும் தங்களின் கருத்தை எழுதி நட்டாவுக்கு அனுப்பி விட்டனர். இதனடிப்படையில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்திருக்கிறது” என்றனர்.

Tags: bjpJ.P.NaddaADMK Alliance
ShareTweetSendShare
Previous Post

 இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

Next Post

ஓபன் டென்னிஸ் போட்டி : இந்திய வீரர் வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies