எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!
Mar 15, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாடாளுமன்றத்தின் கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் போபால் நகரில் “பிரபோதன்” என்ற பெயரில் நடைபெற்றது. இதை நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், கடந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 140-க்கும் மேற்பட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “ஒரு ஜனநாயக நாட்டில் சட்டமியற்றும் அவையின் கண்ணியம் மற்றும் மாண்பை உறுப்பினர்கள் மீறுவது நல்ல செய்தியை வெளிப்படுத்தாது. அவை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான விவாதங்களின் மூலமே சிறந்த தீர்வுகள் கிடைக்கும். ஆனால், தற்போது அவை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து, அமளியில் ஈடுபடும் புதிய பாரம்பரியம் உருவாகி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

சட்டமியற்றும் அவையில் உறுப்பினர்களின் நடத்தை கண்ணியத்துடன் இருப்பதோடு, ஒழுங்குமுறை அவசியம். அவை ஆக்கபூர்வ விவாதங்களுக்கானது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவையின் கண்ணியத்துக்கு சிறு குறைவும் ஏற்படக் கூடாது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், நாடாளுமன்ற கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது. இதில் சமரசத்துக்கு இடம் கிடையாது” என்று கூறினார்.

Tags: om birlaMadya PradeshLoksaba Speaker
ShareTweetSendShare
Previous Post

மருதமலை தைப்பூச திருவிழா!

Next Post

இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies