எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாடாளுமன்றத்தின் கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் போபால் நகரில் “பிரபோதன்” என்ற பெயரில் நடைபெற்றது. இதை நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், கடந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 140-க்கும் மேற்பட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “ஒரு ஜனநாயக நாட்டில் சட்டமியற்றும் அவையின் கண்ணியம் மற்றும் மாண்பை உறுப்பினர்கள் மீறுவது நல்ல செய்தியை வெளிப்படுத்தாது. அவை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான விவாதங்களின் மூலமே சிறந்த தீர்வுகள் கிடைக்கும். ஆனால், தற்போது அவை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து, அமளியில் ஈடுபடும் புதிய பாரம்பரியம் உருவாகி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

சட்டமியற்றும் அவையில் உறுப்பினர்களின் நடத்தை கண்ணியத்துடன் இருப்பதோடு, ஒழுங்குமுறை அவசியம். அவை ஆக்கபூர்வ விவாதங்களுக்கானது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவையின் கண்ணியத்துக்கு சிறு குறைவும் ஏற்படக் கூடாது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், நாடாளுமன்ற கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது. இதில் சமரசத்துக்கு இடம் கிடையாது” என்று கூறினார்.

Tags: om birlaMadya PradeshLoksaba Speaker
Share
Tweet
SendShare
Previous Post

மருதமலை தைப்பூச திருவிழா!

Next Post

இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies