சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! - ராஜ்நாத் சிங்
Mar 15, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி  08  அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அவருடன்  பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.

லண்டனில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம்’ என்ற முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

லண்டனில் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

“சீனாவை எங்கள் எதிரியாக நாங்கள் கருதவில்லை, ஒருவேளை சீனா அவ்வாறு கருதுகிறது. நாங்கள் யாரையும் எதிரியாக கருதவில்லை… 2020ல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நமது பாதுகாப்புப் படைகள் காட்டிய துணிச்சல், இந்தியாவைப் பற்றிய சீனாவின் கண்ணோட்டம் மாறுவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம், இந்தியா பலவீனமாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். முன்பு பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்தோம், ஆனால் இப்போது பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதல் 25 நாடுகளில் இந்தியா உள்ளது என்றார்.

பிரிட்டனுடன் வளமான கூட்டுறவை இந்தியா விரும்புகிறது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நல்லுறவு உள்ளது என்றார். இரு நாடுகளும் இணைந்து பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகக் கூறினார்.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்றார். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதன் போது, ​​இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான மூலோபாய கூட்டுறவை லியுறுத்தினார்.

ராஜ்நாத் சிங் தனது பிரிட்டன் பயணத்தின் போது, ​​பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் உட்பட பல தலைவர்களை சந்தித்தார்.

பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய சமூகத்தினருடன் பாதுகாப்புத்துறை  அமைச்சர் கலந்துரையாடினார்.

Tags: Londondefence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies